Monday 12 December 2011

குறை

ஆணும் பெண்ணுமாய் நீ
அம்மையப்பன் என்று வணங்கினர்
ஆணும் பெண்ணுமாய் நான்
அலி என்ற ஏளனப் பெயர்கொண்டு
உன் திருநங்கைப் படைப்பை
குறை சொல்லுவதா?
அல்லது
குறுகிய மனம் கொண்டு
மானுடம் படைத்ததை
குறை சொல்லுவதா?