Sunday, June 13, 2010

அ ஆ இ ஈ .....

அன்பால் இணைந்து
ஆண‌வ‌த்தால் பிரிய‌
இன்ப‌த்தைத் தேடி
ஈர்க்கும் திசையில் ந‌க‌ர‌
உள்ள‌ங்க‌ளில்
ஊர‌ட‌ங்கு அமைதி!
எண்ண‌த்தில் குழ‌ப்ப‌ம்
ஏக்க‌த்தின் தாக்க‌ம்
ஐய‌ங்க‌ளின் அச்சுறுத்த‌ல்
ஒருவ‌ர் வாழும் உல‌க‌ம் என‌
ஓடிய‌து த‌னிமை வாழ்க்கை!

A small attempt to write some lines in alphabetical order but with some theme.

தெளித‌ல்

ஏமாற்ற‌ம், அதை புரிந்து கொண்டேன்
நீ பொய் சொன்ன‌ போது
வ‌லி, அதை அறிந்து கொண்டேன்
நீ என்னிட‌மிருந்து வில‌கி நின்ற‌ போது
இற‌ப்பு, அதை தெரிந்து கொண்டேன்
நீ என்னை பிரிந்த‌ போது
என‌க்குள் நானே உயிர்த்தெழுந்தேன்
இனி நீ என‌க்கில்லை என்றான‌ போது!