Friday, December 10, 2010

என் காத‌லி

அவளை காணும் வ‌ரை
க‌ன‌வுக‌ளை
க‌விதையாய் வ‌ரைந்தேன்!
அவளை காத‌லித்த‌ப் பின்
நிக‌ழ்வுக‌ளை
க‌விதையாய் ப‌திவு செய்தேன்!
அவ‌ளை பிரிந்த‌ பின்
துய‌ர‌ங்க‌ளை
க‌விதையாய் செதுக்கினேன்!
தெளிந்தேன்! தெரிந்து கொண்டேன்!
நான் காத‌லித்த‌து
அவ‌ளை அல்ல‌
க‌விதையை என்று!