Wednesday, January 24, 2024

முந்தானை

எப்பொழுதும் திட்டிக் கொண்டே சாப்பிடும் அவன் 
பேசாமல் பரிமாறும் அவள்
கைகழுவியதும் தேடுகிறான் அவளின் முந்தானையை

வாழ்க்கைத் தத்துவம்

முடித் திருத்தகங்கள் சொன்னது 
ஆழமான வாழ்க்கைத் தத்துவம் 
மயிராப் போச்சு! 

உரை

ஈரடி குறள் 
உரைநூல்கள் பல 
தீராத தாகமாய்

தாகம்

தண்ணீர் கேட்டாள் 
தன் தாகத்திற்கு 
மோர் விற்கச் செல்லும் பாட்டி 

ஒழுக்கம் தவறாமை

பெற்றோர்களின் காலை நேரத்துச் சாலை விதி மீறல்கள் 
பள்ளி சிறுவர்களின் 
நேரம் தவறாமை ஒழுக்கத்திற்காக !

ஹைக்கூ

மூன்று வரி கவிதை
அதன் இலக்கண வகுப்போ 
நீண்டது ஒன்றரை மணி நேரம்!