Saturday, September 14, 2013

நெற்றி முத்தம்

காணாது தேக்கி வைத்த ஏக்கமும் 
பேசாது பொத்தி வைத்த கோபமும் 
கொஞ்சாமலும் கெஞ்ச விழையாமலும் 
அடக்கி வைத்த ஆணவமும் 
கரைந்துத் தான் போனது 
நிறைகுடம் தளும்பிய கண்ணீராய் 
அவன் இட்ட நெற்றி முத்தத்தில்! !