Wednesday, December 26, 2007

வரவேற்றுக் காத்திருக்கிறோம் !!

வரவேற்கிறோம்!
உன் காது மடலில்
கொஞ்சும் காதணிகளை!
உன் கையில் வலம் வரும்
வளையல் போன்ற வளையங்களை!
அவ்வப்போது மருதாணி
சிவக்கும் கைவிரல்களை!
பெண்களே (சில சமயம்) பொறாமைப்படும்
உன் கூந்தல் சரிவை!
பெண்களைப் போன்று
அழகு நிலையத்தையும்
நாடிச் செல்லும் இச்சைகளையும்
வரவேற்றுக் காத்திருக்கிறோம் !!
பெண்களைப் போன்றே
ஒரு நாள்
கருவையும் சுமப்பாய் என்று!!!

1 comment:

D.Praveem Kumar said...

Paravaillai. By the way, my name is Praveen Kumar not Praveem Kumar.